
About Us
ஒரு உண்மையான யோகா மாஸ்டர் மற்றும் யோகா சிகிச்சையாளர்
- குருஜி ஸ்ரீ மஹாதேவ்

கருவில் உதித்த மாணிக்கம்
நம் மாஸ்டர் உடைய தந்தை காவல்துறையில் பணிபுரிந்த நேர்மையான அதிகாரி திரு திருவேங்கடம் லட்சுமணன் அவர்கள் இவருடைய துணைவியார் ஜெயா அம்மாள் இவர்களுக்கு செப்டம்பர் மாதம் 1978 ஆம் ஆண்டு அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ஐந்தாவது பிள்ளையாக கருவில் உதித்த மாணிக்கம் நம் மாஸ்டர்.
எனை இந்த உலகிற்கு ஈன்றெடுத்த எனது தாய் தந்தையின் பாதமலர்களை வணங்கிப் பணிகிறேன்..

எனை இந்த உலகிற்கு ஈன்றெடுத்த எனது தாய் தந்தையின் பாதமலர்களை வணங்கிப் பணிகிறேன்..

இவர் தனது ஆரம்ப கால கல்வியை மதுராந்தகம் அரசு பள்ளியில் பயின்றவர்.
இவர் சிறு வயதில் சில உடல் உபாதை களால் அவதியுற்று பிறகு யோக பயிற்சியின் மூலம் பலன் அடைந்தார்.
பிறகு யோக கலையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் பல குருமார்களை சந்தித்து யோக கலையின் நுணுக்கங்களை கற்று அறிந்தார்.
யோக கலையில் யோகாசனம் – பிராணயாமம் – மந்திரஜெபம் – அல்பா தியானம் –
யோக மருத்துவம் போன்றவை உள்ளடக்கிய யோகக்கலையில் 15 ஆண்டுகள் அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவர்.
யோகக் கலையை தொடங்கிய நோக்கம்
மனிதர்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் பொருட்டு இந்த வகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்து வெளிவர தொலைநோக்கு அடிப்படையிலேயே யோக கலை வகுப்பு தொடக்கப்பட்டுள்ளது. இனிமையான இல்லறத்துடன் சிறக்கும் வழிமுறைகளும் நல்ல அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் வழிமுறைகளை புரிய வைப்பதற்கும் ஆன்மீக சிந்தனை வளர செய்வதற்கும் அறியாமையை போக்கி நல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பிறவியின் நோக்கத்தை உணர செய்வதற்கும் தானம் தர்மம் போன்றவற்றின் மூலம் ஆத்ம பலத்தை அதிகரிக்கச் செய்வதற்கும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வலியுறுத்துவதற்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்தி அதன் மூலம் நோய்களை அகற்றுவதற்கும் இயற்கை உணவின் இன்பத்தை மக்கள் உணர்வதற்கு என இயற்கை வாழ்வின் அற்புதத்தையும் கலாச்சார சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி அதன் மூலம் சக்தி வாய்ந்த பரிணாமத்தை மனிதனுக்கு அளித்து அவனை ஒரு உன்னத மனிதனாக மாற்றுவதற்கும் அற்ப விஷயங்களில் அடிமைப்பட்டு கிடக்கும் மனிதனை அறவழியில் நெறிப்படுத்துவதற்கும் சித்தர்கள் மகான்கள் ஞானிகள் பழகி வந்த இந்த கலையை வளர்க்கவும் அவர்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் இக்கலை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இப் பயிற்சி மையத்தில் எண்ணற்ற மாணவர்கள் கலந்து கொண்டு பலன் கண்டு வருகின்றனர்.

யோக கலை வளர்த்த விதம்:
நம் தேசத்தின் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்ட மாஸ்டர் நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கல்வி முறையான குருகுல கல்வி முறையில் பயிற்சி முறைகளை வகுத்தார்


ABOUT US
மாஸ்டரின் கலை ஆர்வம்
யோகக் கலையில் யோகாசனம் பிராணயாமம் மந்திரஜெபம் அல்பா தியானம் போன்றவை உள்ளடக்கிய யோக கலையில் நிபுணத்துவம் பெற்றவர் நம்முடைய மாஸ்டர்.
அடுத்து எந்தக் கலையை புசிப்பது என யோசித்து சித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் மலர் மருத்துவம் வண்ண மருத்துவம் காந்த மருத்துவம் ஜெம் தெரப்பி வாட்டர் தரப்பி ஹிப்னாடிசம் போன்ற உளவியல் கலையின் கனிகளையும் அதீத பசி உள்ளவர் போலவே இனிமையாக புசித்திட்டார்


யோகக் கலையின் மூலம் மற்றவர்கள் அடைந்த பலன்.
கருப்பை கோளாறுகள்
ஒரு பெண் முழுமை அடைய காரணமான தாய் என்ற அந்தஸ்து அளிக்கும் உறுப்பாகிய கர்ப்பப்பைக்கு தான் எத்தனை எத்தனை இன்னல்கள் எத்தனை கொடுமையான வியாதிகள் கருப்பை கோளாறு மாதவிடாய் கோளாறு கர்ப்பப்பை பலவீனம் கருச்சிதைவு மலட்டுத்தன்மை கஷ்டப் பிரசவம் இப்படிப்பட்ட கர்ப்பப்பை பிரச்சனைகளை தாய் உணர்வுடன் சேயினை காக்கும் தாய் போல் அதில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் யோகாவினால் சரி செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது

இயற்கை உணவின் இனிமை என்று பொருள்
- பச்சை பசும் காய் கனிகளை பங்கோடனே உண்டு வந்தால்
- பசுமையான எதிர்காலம் நோயின்றி பல காலம் நீ வாழ்ந்திடலாம்

அதற்கு பதிலாக
அதை விடுத்து வறுத்தெடுத்த வற்றல் உணவுகளையும் பொறுத்தெடுத்த போண்டா பொறியல்களையும் நெறியின்றி நித்தம் நீ பு வந்தால் உன்னை வாட்டி எடுக்கும் வியாதிகள் வரிசையாய் வந்து சேரும் என்ற உண்மை இதனை நீ அறிந்து இயற்கையோடு இணைந்து இனிய வாழ்வை பெற்றிடு.
மதுராந்தகம் மண்ணில் உதித்த யோக மலர்.
மாஸ்டர் நடத்தும் யோக பயிற்சி மையத்திற்கு பல ஆண்டுகளாக பெயர் இல்லாமல் நடந்து வந்தது. ஒரு மனிதன் தன் நிலையை உணர்வதற்கும் கடவுளை அடைவதற்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது தியானம். ஆன்மாக்கள் லயம் ஆவது தியானத்தில். ஒரு சமயம் மாஸ்டர் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது அவர் ஆழ்மனதில் உதித்த மலர்தான் தியானாலய யோகா பயிற்சி மையம். 2015 ஆம் ஆண்டு தனது யோக பயிற்சி மையத்திற்கு பயிற்சி இம்மக்களுக்கு அறிவித்தார்.
எங்கள் சேவைகள்
உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயிற்சி செய்யுங்கள்
தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு ஒரு சிறந்த மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க இது உதவும். தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறுகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் ஊளைச் சதை கரைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் மனம் அமைதி அடைந்து நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது மனம் பதற்றங்கள் நீங்கி அமைதி அடைகிறது

பவன முக்தாசனம்
கீழ் மற்றும் நடு முதுகு வலிக்கு பவன முக்தாசனம் நல்ல பயிற்சி. வயிற்றுக்குள் இருக்கும் தேவையற்ற வாயுக்கள் வெளியேறும். வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுக்கப்படுவதால் மலச்சிக்கல் வராது. ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.

தனுராசனம்
முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளியேறும். தொந்தி கரையும், மார்பு விரியும், இளமைத்துடிப்பு அதிகரிக்கும்.

ஹலாசனம்
ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நல்ல நோயெதிர்ப்பு பதில் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை ஊக்குவிக்கும் உணவுத் திட்டங்களை உருவாக்க உதவுகிறது.

மச்சாசனம்
பலர் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் வாழ்க்கையை மாற்றும் முன்னேற்றங்களை அனுபவித்தனர். யோகாவுக்குப் பிறகு தியானம் செய்ய வேண்டும். அது உங்கள் உடலை அமைதிப்படுத்துவதோடு, முழு உடலுக்கும் ஒரு தளர்வை அளிக்கும்

விபரீத கரணி
இதயத் துடிப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், தசைகள் மற்றும் மனதை தளர்த்தவும் உதவுகிறது. சிரை நோய் போன்ற பல நிலைமைகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும். அமைதியற்ற கால் நோய்க்குறி.

அர்த்த மச்சேந்திராசனம்
பலர் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் வாழ்க்கையை மாற்றும் முன்னேற்றங்களை அனுபவித்தனர். யோகாவுக்குப் பிறகு தியானம் செய்ய வேண்டும். அது உங்கள் உடலை அமைதிப்படுத்துவதோடு, முழு உடலுக்கும் ஒரு தளர்வை அளிக்கும்
மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்கவும், சுய முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்படவும் அவர் ஊக்குவித்தார். பிறருக்குச் சேவை செய்வதில் கவனம் செலுத்துங்கள்: சுவாமி விவேகானந்தர், மற்றவர்களுக்குச் சேவை செய்வதே, மனிதநேயத்தை மேம்படுத்துவதே வாழ்க்கையின் நோக்கம் என்று நம்பினார்.
சுவாமி விவேகானந்தர்....

பயிற்சி வகுப்பில் தெரிந்து கொள்ளும் விஷயங்கள்
- உலகில் உள்ள மருத்துவ முறைகள் பற்றிய விளக்கம்.
- மருத்துவ முறைகளின் தத்துவம் பற்றிய விளக்கம்.
- சித்த மருத்துவம் முழு விளக்கம்
- குண்டலினி யோகம் முழு விளக்கம்
- விதி மதி கர்மா பற்றிய விளக்கம்.
- ஆரோக்கிய ரகசியம் 4 பற்றிய முழு விளக்கம்
- எண்ணெய் குளியல் எண்ணெய் குளியலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பற்றிய விளக்கம்
- கருப்பைப் பற்றிய விளக்கம்.
- முதுகு தண்டுவடம் பற்றிய விளக்கம்.
- சுகப்பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் பெறும் ரகசியம் பற்றிய விளக்கம்.
- குளியல் முறை உறங்கும் முறை பற்றிய விளக்கம்
- உங்கள் பிறந்தநாளின் போது செய்ய வேண்டியது பற்றிய விளக்கம்.
- ரஜோ குணம் தமோகுணம் சாத்வீக குணம் பற்றிய விளக்கம்.
- யோக உணவு அமிர்த உணவு இயற்கை உணவு பற்றிய விளக்கம்
- நோய்கள் தோன்றுவதற்கான மூல காரணங்கள் பற்றிய விளக்கம்.
- பஞ்சபூத ரகசியங்கள் மற்றும் ராஜ உறுப்புகள் பற்றிய விளக்கம்
donate now
Dhyanalaya Yoga Therapy Foundation
Institute Of Sri Pathanjali Ashtanga
Yogam In Gurukula Kalvi