Reg.No -BK IV/19/2022

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை. இன்ஸ்டியூட் ஆப் ஸ்ரீ பதஞ்சலி அஷ்டாங்க யோகம். குருகுல வாழ்வியல் கல்வி முறை - மதுராந்தகம். 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் இருபாலருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . முன்பதிவுக்கு உடனே முந்துங்கள்.

யோகாவின் வரலாறு.​

ஸ்ரீ பதஞ்ஜலி மகரிஷி அறிமுகம்.

யோகேன சித்தஸ்ய பதேன வாச்சாம் மலம் சரீரஸ்ய ச வைத்யகேன யோபாகரோத்தம் பிரவரம் முனினாம் பதஞ்ஜலிம் பிரான்ஜலி ராணதோஸ்மி

யோக சூத்திரங்கள் மூலம் மனதின் மாசுகளையும், இலக்கண நூலை புனைந்ததனால் சொற்களின் பிழைகளையும், ஆயுர்வேத நூலை இயற்றியதனால் உடலின் மாசுகளையும் கலைய வழி வகுத்த முனிவர்களுள் சிறந்தவரான பதஞ்ஜலியை கூப்பிய கரங்களுடன் நான் வணங்குகிறேன்.

யோக வழியை மனித குலத்துக்கு தந்தவர் ” இறண்ய கருப்பர்’

சமாதி பாதம்- தியானத்தின் மூலம் அடையும் சமாதிகள் பற்றியது.

சனாதன பாதம் – ஒழுக்க விதிகள் பற்றியது

விபூதி பாதம் – யோக வழியில் காணும் அற்புதங்கள் பலன்கள் பற்றியது.

கைவல்ய  பாதம் – ஆன்ம விடுதலை பற்றியது

வேத உண்மைகளை பிரம்ம சூத்திரங்களாக வியாசரும், பக்தி சூத்திரங்கள் ஆக நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்ஜலி முனிவரும் மானிடம் செழிக்க செய்து வைத்தனர். இவரை ஆதிசேஷன் அவதாரமாக சொல்வர்.

 
ஸ்ரீமன் நாராயணனின் படுக்கையே ஆதிசேஷன் சக்தியின் ஒரு விரல் மோதிரம் ஆகியவர் இவ்வுலகை தன் தலையில் தாங்கிக் கொண்டிருப்பவர் எனவும் சொல்வர்.

தந்தை அத்திரி முனிவர் தாய் கோணிகா தேவி. வேறு பெயர்கள். அத்திரி முனிவரின் பிள்ளை ஆனதால் ஆத்ரேயர் எனவும். கோனிகா தேவியின் பிள்ளை என்பதால் கோனிகாபுத்திரர் என்றும், தாயின் பாதங்களை வணங்கியபடி பிறந்ததனால்
( பதம் + அஞ்சலி) பதஞ்ஜலி என்றும் அழைப்பதுண்டு.
இவர் எழுதிய மூன்று நூல்கள் யோகத்தினை விளக்கும்
யோக சாஸ்திரம், மொழி இலக்கணமான மகா பாஷ்யம், ஆயுர்வேதம் ஆகிய ஆத்ரேய சம்ஹிதை. ஆக உடல் மனம் வாக்குக்கான மூன்று நூல்களை செய்தவர் ஆகிறார்.

என அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்கள் ஆக வைத்தார் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி முனிவர்.

யோகா என்றால் என்ன?

யோகா என்ற வார்த்தையே பரந்த விரிவான பொருள் கொண்டது.

இது சமஸ்கிருத வார்த்தையான யூஜ் என்பதிலிருந்து தோன்றியது. யூஜ் என்றால் இணைதல் ஒன்று சேர்வது – என்று பொருள்.

இந்த இணைதல் என்பது உடலையும் மனதையும்நுகத்தடியால். இணைக்கப்பட்ட இரு எருது களை போல சேர்த்து நடத்துவது என்று பொருள் கொள்ளலாம்.

மனிதனை அவனின்உயர்ந்த உன்னத லட்சியத்துடன் சேர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.அதாவது குறைகள் உள்ள சரீரத்தை குறைவில்லாத தெய்வீக ஆத்மாவுடன் இணைப்பது எனலாம்.

மனிதனின் உடல், மனம்,ஆன்மா, இவற்றை பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பது யோகா.

பகவத் கீதையின் படி யோகா " செயல் திறமை," என்று விவரிக்கப்படுகிறது.

“செய்வன திருந்தச்” செய் என்கிறது ஆத்திச்சூடி. இன்று யோகா உலகமெங்கும் பரவிய கலாச்சாரம் ஆகிவிட்டது. நம் நாட்டை விட வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டது.

பகவான் கிருஷ்ணர் கீதையில் நான் யோகத்தை சூரியனுக்கு சொன்னேன் சூரியன் மனுவிற்குச் சொன்னான் மனு ஷ்வாவுக்கு சொன்னான் காலப்போக்கில் இது மறைந்து விட்டது அதனால் அர்ஜுனா நான் இதை உனக்கு இன்று சொல்கிறேன் என்றார் . நான் யோகத்தை சூரியனுக்கு சொன்னேன் என்றால் சூரியன் தோன்றுவதற்கு முன்பே யோகம் இருந்திருக்கக்கூடும் என்று பொருள்படும்.

யோகம் என்பது மகாபாரத காலத்திலேயே இருந்தது . ராமாயணத்தில் கௌசல்யா பிராணயாமம் செய்ததாக குறிப்புகள் உண்டு.

யோகாவைப் பற்றிய ஆதாரம் தொல்பொருள் ஆய்வுகளின் படி சிந்து – சரஸ்வதி நதி சமவெளி நாகரிக இடங்களில் கிடைத்த கலைப் பொருள்களில் கிடைத்துள்ளது . சிந்து நதி நாகரிகம் உலகிலேயே மிகப் பழமையான ஒரு பெரிய சமூகத்தின் சரித்திரம்.
அந்தக் காலத்திலேயே மிகவும் முன்னேறி இருந்த ஒரு நாகரிக சமுதாயம். இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வுகளின் கிடைத்த கல் முத்திரைகள் ( லட்சி ) 

மூல பந்தாசன நிலையில் கண்டெடுக்கப்பட்டது
இதனால் யோகா ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது நிரூபிக்கப்படுகிறது.

யோகா என்பது ஒரு உள் உலக விஞ்ஞானம்

வெளி உலக விஞ்ஞானத்தை அறிந்த நாம் உள் உலக விஞ்ஞானத்தை அறிய மறந்தோம்.

தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

இன்றைய அவசர விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது இதனால் அமைதி இழந்து மனவலிமை இழந்து உடல் மன நோய்களுக்கு ஆட்பட்டு மரணிக்கின்றான்.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ கொஞ்ச நேரமாவது நேரம் ஒதுக்குவது மிக மிக அவசியம்.

 

யோகாசனம் என்ற சொல் பொதுவாக உடலை முறுக்கி செய்வதாகவோ தலைகீழாக நிற்பதாகத்தான் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் யோக சூத்திரங்களை வகுத்த பதஞ்சலி முனிவர் ஆசனம் என்றால்
ஸ்திரமாகவும் சுகமாகவும் இருப்பது என்கிறார். அதாவது இலகுவாகவும் இன்பமாகவும் இறுப்பது.

யோகா என்ற சொல் சமஸ்கிருத சொல்லாகும். யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை என்று பொருள். அதாவது உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம் இதை தமிழில் இருக்கை நிலை பயிற்சிகள் என்று அழைக்கலாம்.

யோகாசனங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கும் உடல் பலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் வழிவகை செய்கின்றன. யோகாசனங்கள் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பயிற்சியாகும். ஒரு சில யோகாசனங்ளையாவது நாம் தேர்ந்தெடுத்து கொண்டு செய்வது நமக்கு நீடித்த பலனை அளிக்கும்.

சமீப காலமாக யோகாவின் முக்கியத்துவத்தை பல நாடுகளும் புரிந்துகொண்டு இந்த வாழ்க்கை முறையினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தியாவின் உதவியை நாடுகின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் நாளை அகில உலக யோகா தினமாக நாம் கொண்டாடுகிறோம்.

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன ?

அஷ்டாங்க யோக முறை என்பது நம் பாரத தேசத்தின் பாரம்பரிய யோக முறை.

1.நியாயம்
2.வைஷேசிகம்
3.சாங்கியம்
4.யோகம்
5.பூர்வ மீமாம்சை
6. உத்ரமீமாம்சை

என்ற பண்டைய இந்தியாவின் ஆறு தத்துவ சித்தாந்தங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீ பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார்.

யோகா வாழ்க்கை முறையில் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் படிப்படியாக எட்டு நிலைகளை பற்றி கூறுகிறார்.

இயமோ நியமமே எண்ணிலா ஆதனம் நயமுரு பிராணாயாமம் பிரத்தியாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுரும் அட்டாங்குமாவது மாமே - திருமந்திரம்.

அங்கம் என்பது உறுப்பு யோகம் என்பது ஒன்று தலை குறிக்கும்.

உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபடக் கடைபிடிக்க வேண்டிய எட்டு படிநிலைகளை எடுத்துரைப்பது அஷ்டாங்க யோகம்.

1.இயமம்
2.நியமம்
3.யோகாசனம்
4.பிராணயாமம் 5.பிரத்யாகாரம்
6.தாரணை
7.தியானம்
8.சமாதி

ஒவ்வொரு சாதகரும் யோக வாழ்க்கை முறையில் இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாக கடந்து சமாதி என்ற உயரிய நிலையை அடைய வேண்டும்.

இயமம்

மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள் அகிம்சை
திருடாமை பிரம்மச்சரியம் சத்தியம் ஆசை
கொள்ளாமை போன்ற அடிப்படை மனிதப் பண்புகளை வளர்க்க வேண்டும்.

நியமம்

அகத்தூய்மை புறத்தூய்மை இறைபக்தி
தவம் இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.

யோகாசனம்

ஒவ்வொரு நோயையும் யோகாசனம் எப்படி குணப்படுத்துகிறது?ஆசன விதி முறைகள் என்ன?
ஆண்களுக்கு, பெண்களுக்கு, பெரியவர்களுக்கு சிறியவர்களுக்கு நோய் உள்ளவர்களுக்கு
ஆரோக்கியத்திற்கு என்று யோகாசனம் எப்படி உதவுகிறது என்பது விளக்கப்படுகிறது.

பிராணயாமம்

பிராணன் என்பது என்ன?
இது மனிதனின் ஆயுளை எப்படி அதிகரிக்கும்?
மனதை ஒருமைப்படுத்த பிராணயாமம் எப்படி உதவுகிறது?

இருதயம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

பிரத்யாகாரம்

ஐம்புலன் இன்பங்களில் சிக்குண்ட மனதை உள்முகமாக திசை திருப்பும் பயிற்சி.
நமது ஆன்ம ஆற்றலை உணர வைக்கும் பயிற்சி.

தாரணை

உள்முகமாக திசை திருப்பப்பட்ட மனதை
மனதை ஒன்றின் மீது குவித்தல்.

தியானம்

ஒரே சிந்தனை தாரணை பயிற்சியின் முடிவு தியானம்.மனம் அமைதி பெறும். இருதயம் பாதுகாக்கப்படும். நோய்கள் அணுகாது.

சமாதி

ஆதியில் சமம். எண்ணங்கள் அற்ற நிலை
பேரின்ப நிலை மௌன நிலை இதுவே நம் ஆன்மாவின் உண்மையான இயல்பு.

இதில் முதல் நான்கு நிலைகள் உடம்பிற்கான பயிற்சி முறைகள் ஹத யோகம் என்றும் அடுத்த நான்கு நிலைகள் மனதிற்கான பயிற்சி ராஜயோகம் என்றும் உடல் மன பயிற்சிகளாக அஷ்டாங்க யோக முறையை ஶ்ரீ பதஞ்சலி முனிவர் வகுத்து தந்தார்.

donate now

Dhyanalaya Yoga Therapy Foundation

Institute Of Sri Pathanjali Ashtanga
Yogam In Gurukula Kalvi

Translate »